அடையாளம் இழந்த ஆணாக..1

 





அணிந்திருந்து களித்திருந்ததை விட
மகளுக்காக மகனுக்காக வென்று காத்திருந்ததே அதிகம்,

ஆசையாய்  வாங்கிய அத்தனை ஆபரணங்களும்...

.

பெண்களும் ஆடைகளும்,

பெண்களும் ஆபரணங்களும், என சம்பிரதாய சொல்லாடல்களுக்குள் அடக்கி வைத்து விடுகின்றோம் அவ்வளவு எளிதாக..

.

புடவை அணிந்து வா அனைவரும் இருப்பார்க்கள் என தொடங்கி,

எதற்காக இவ்வளவு சிறிய ஆடை வேண்டாம் என்று,

எளிமையான கேள்விகளோடு தான் நிகழ்த்தப்படுகிறது அத்தனை பெரிய வன்முறைகளும்,

.

சிறியதோ பெரியதோ புடவையோ குட்டை பாவாடையோ அவர்களின் தேவைகளை தாண்டி புரிந்து விடவா போகின்றது? புரிந்திருந்தால் அத்தகைய தீர்வுகளுக்கும் தேவை இருந்திடவா போகின்றது?

.

கருத்துக்களும் விமர்சனங்களும் வைத்து விவாதிப்பதற்கு பொது வெளியில் அவர்களே முன்வைக்காத போது , முந்தி அடித்துக் கொண்டு முயற்சிப்பதில் அத்தனை ஆர்வம் நமக்குள் ஆணாக பிறந்து விட்டதால் என்னவோ?

.

இத்தனை பெரிய செலவுகளோடு இன்னும் வேண்டுமா, எதற்காக இந்த ஆபரணங்கள் மீதான மோகம் இன்னும்?

என்ற சிந்தனையின் கேள்விகளை தள்ளி வைத்து விட்டு ,

பெண்களால் /பெண் பிள்ளைகளால் இந்த சுமையையும் ஏற்க வேண்டுமே என்ற வெறுமையின் விளிம்பில் தான் இன்னும் நின்று கொண்டிருக்கிண்றோம்,

.

.

ஆம் 

.

அணிந்து களித்திருந்ததை விட

மகளுக்காக்க மகனுகாக்க வென்று காத்திருந்ததே அதிகம் அந்த நகைகள் என அவள் சொல்லும் போது கூட ,

.

பொன் மீது மோகம் கொண்ட சமூகம் பீடித்திருக்கும் மன நோயிலிருந்து விடுபடாத வரை, பொன் உயர்வாகவும் அதற்காக தான் பெண் உயிராகவும் இருக்கின்றாள் என அடையாளம் இழந்த ஆணாக இதை பதிவிட மட்டுமே முடியும்...

Comments

Popular Posts