பனையன் மகனே. பார் புகழும் பாரி வேளே.







பனையன் மகனே...

பறம்பின் தலைவனே...


கருணையால் தோய்ந்த மாபெரும் கடலே,

காதலால் மணந்த குறிஞ்சியின் மலரே,

வீரத்தால் உனை வெல்ல ஒருவரும் இலரே...

.

பெரும்படை கொள்வான் 

பகை கொள்வான்

முடியுடை செய்வான் 

முரசமும் செய்வான்

புகழ்பட வாழ பெருமையின் 

வழி சேர போரும் செய்வான்

மன்னன்...

.

மலையென கொள்வான்

கொடையையும்,

உயிரென நேசிப்பான்

இயற்கையையும்,

கலையென வகுப்பான்

வாழ்வியலையும்,

தாயென காப்பான்

குடிகளையும்.

தலைவன்....

.

பறம்பின் தலைவனே,

பார் புகழும் பாரி வேளே...

நின் வீரத்திற்கு மலைகளே சாட்சி,

நின் கொடைக்கு இயற்கையே சாட்சி,

நின் கருணைக்கு பொழியும் மழையே சாட்சி,

நின் புகழின் பெருமைக்கு

இப்பொழுதும் உன் பெயர் உரைப்பதே சாட்சி.

.

தமிழ்குலத்தின் அடையாளமாய் 

நீ இருப்பதே மாட்சி.

.

பனையன் மகனே,

பார்புகழும் பாரி வேளே..



Comments

Popular Posts