வாழ்கின்றேன் நானும்

 


ஏதோ ஒரு நாள் மீதமிருந்த பிஸ்கட் துண்டுகளை பகிர்ந்து அளித்தற்காக ஒவ்வொரு முறையும் வீதி வழியே வரும் போதெல்லாம் ஓடி வந்து 

கொஞ்சும் தெரு நாய் குட்டியின் அன்பை பெறும் போதும்,

.

வயதின் மூப்பிலும்

இளமையின் துடிப்போடு

பூக்களை விற்கும் பாட்டியிடம் பத்து ரூபாய் குறைத்து 

குடுத்து வாங்கிய போதும்,

மகராசனா இருக்கணும்பா என பூக்களின் மணமாய் வீசிய வார்த்தைகளின் அன்பை 

உணரும் போதும்,

.

அலுத்து வெளுத்து

அவசரமாய் அலுவல்

முடித்து திரும்பும் நேரம்

தாமதம் ஆன போதும்

தவறாமல் பிடித்ததை

சமைத்து வைத்து காத்திருக்கும்

நண்பனின் அன்பை ருசிக்கும் போதும்,

.

கணம் தவறாமல்

கண்ணிமை போல்

தாய் செய்யும்

காதலிலும்,

சலிக்காமல் சண்டையிட்டு

மகிழ்வூட்டும் சகோதரியின்

பாசத்திலும்,

கவலைகளின் பாரம்

கனவிலும் தீண்டி விடாமல்

தோள் கொடுத்து 

தேத்தி விடும் உறவுகளின்

அன்பில் திளைக்கும் போதும்,

.

தனிமையின் அமைதியில் 

புத்தகங்களில் மூழ்கி எனை 

தேடி திரியும் போதும்,

.

வியர்வையின் வாசம் வீச, 

உடலெல்லாம் அயர்ந்து 

போக செய்யும் உடற்பயிற்சியின்

வலிகளை விரும்பி

ரசிக்கும் போதும்,

.

பச்சிளம் குழந்தையாய்

எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி,

அறிந்தவர் அறியாதவர் என்ற

வேறுபாட்டுக்கு இடமின்றி,

சக மனிதனும் தன்னை 

போலவே என

திகட்டாத தீராத

அன்பை எதார்த்தமாக

வழங்கும் மனிதர்களை

வழியெங்கும் காணும் போதும்,

.

இந்த உடலில் உயிரும்

உலகில் நானும்

வாழ்வதை உணர்கின்றேன்,

நவீன சாமானியன்...

Comments

Popular Posts